மோட்டார் சைக்கிளில் சென்ற அரசு போக்குவரத்து ஊழியரை வெட்டி கொள்ளை…!!
கொருக்குப்பேட்டை சந்திரசேகர் நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் (39). கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக டெப்போவில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.
இனறு அதிகாலை 4 மணி அளவில் அவர் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். தண்டையார்பேட்டை அருகே எண்ணூர் நெடுஞ்சாலையில் சென்ற போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் வழி மறித்தனர்.
திடீரென அவர்கள் ரவிக்குமாரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்தார். உடனே மர்ம நபர்கள் இருவரும் ரவிக்குமார் பையில் இருந்த செல்போன், ரூ.1000–த்தை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.
அவ்வழியே சென்றவர்கள் உயிருக்கு போராடிய ரவிக்குமாரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
Average Rating