கல்லூரி மாணவியை கடத்தி சென்று கற்பழிக்க முயற்சி: பொதுமக்கள் திரண்டதால் கண்டக்டர் தப்பி ஓட்டம்…!!
குமாரபாளையம் அருகே உள்ள கத்தேரி கிராமத்தை சேர்ந்த விசைதறி தொழிலாளியின் மகள் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2–ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
நேற்று இரவு சுமார் 10 மணியளவில் வீட்டில் மளிகை கடைக்கு சென்று விட்டு வருவதாக மாணவி கூறிவிட்டுச் சென்றார்.
அந்த பகுதியில் மினிபஸ் கண்டக்டர் விமல் (வயது 25) என்பவர் கல்லூரி மாணவியை வாயை பொத்தி கடத்திக் கொண்டு சென்று, ஊரின் ஒதுக்கு புறத்தில் உள்ள தனியார் விசைதறிக் கூடத்தின் பின்புறத்திற்கு சென்றார். அங்கு வைத்து விமல் அந்த மாணவியை கற்பழிக்க முயற்சி செய்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டதும் விசைத்தறிக் கூட்டத்தில் வேலை செய்து வந்த பெண்கள் அங்கு திரண்டு சென்றனர். அவர்களை பார்த்ததும் கண்டக்டர் விமல் தப்பி ஓடி விட்டார்.
காயம் அடைந்த மாணவி குமாரபாளையம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து தேவூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விமலை தேடி வருகிறார்.
Average Rating