திண்டுக்கல் அருகே முகமூடி கொள்ளை கும்பல் அட்டகாசம்…!!
திண்டுக்கல் அருகே சின்னாளபட்டி பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்து தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வந்தது. இந்த தொடர் திருட்டு சம்பவம் அம்பாத்துரை மற்றும் சின்னாளபட்டி போலீசாருக்கு பெரும் தலைவலியை உருவாக்கியது. இதனை தொடர்ந்து ரோந்து வாகனம் கொடுக்கப்பட்டு ரோந்து பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கடந்த 3 மாதத்தில் மட்டும் 6 பெண்களிடம் இதுபோன்ற நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு சின்னாளபட்டி அருகே உள்ள கலிக்கம்பட்டியை சேர்ந்த ராமுதாய் என்ற பெண் போக்குவரத்து நகர் அருகே உள்ள வீட்டில் துணி துவைத்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் ஒரு வழியை காட்டி இது எங்கே போகிறது என்று கேட்டுக் கொண்டே ராமுதாயிடம் கழுத்தில் கத்தியை வைத்து 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இது குறித்து ராமுதாய் சின்னாளபட்டி போலீசில் புகார் செய்துள்ளார்.
அந்த கொள்ளை சம்பவம் அடங்குவதற்குள் நேற்று பட்டப்பகல் 1 மணியளவில் போக்குவரத்து நகரில் குடியிருப்புகள் நெருக்கம் மிகுந்த பகுதியில் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக உள்ள சங்கரபாண்டியன் குடியிருந்து வருகிறார். நேற்று சங்கரபாண்டியன் வேலைக்கு சென்று விட்ட நிலையில் அவரது மனைவி ரெங்கநாயகி தனது 5 மாத பெண் குழந்தையுடன் வீட்டை தாழ்பால் போட்டு வீட்டுக்குள் இருந்துள்ளார்.
அப்போது வீட்டின் கதவு தட்டப்பட்டதை அறிந்து வீட்டை திறந்துள்ளார். அப்போது முகமூடி அணிந்த இரண்டு பேர் வீட்டிற்குள் நுழைந்ததும். கதவை தாழ்பால் போட்டுவிட்டனர்.
பின்னர் அதில் ஒருவன் 5 மாத குழந்தையை தூக்கி குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு சத்தம் போட்டால் குழந்தையை கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளான்.
மற்றொருவன் ரெங்கநாயகியை முதுகில் தாக்கினான். இதில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் அவர் அணிந்திருந்த 3 பவுனை நகையை பறித்து கொண்டு ஓடினர்.
புகாரின் பேரில் அம்பாத்துரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating