கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை: கேரள வாலிபர்கள் கைது..!!

Read Time:1 Minute, 41 Second

99e38934-35ec-4441-8778-8126465a15a0_S_secvpfபோத்தனூர் இன்ஸ்பெக்டர் பிரேமானந்தன் மற்றும் போலீசார் இன்று அதிகாலை ஈச்சனாரி பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர் அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 4 வாலிபர்கள் வந்தனர்.

மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் அந்த வாலிபர்களிடம் இருந்த பைகளை சோதனையிட்டனர். அவர்கள் வைத்திருந்த பைகளில் 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் திருச்சூர் அருகேயுள்ள பெருங்கோட்டூரை சேர்ந்த ஆதர்ஷ் (வயது 23), தினேஷ் (21), அருண் (24), பாசில்(20) என்பது தெரியவந்தது.

மங்களூரில் இருந்து கஞ்சா வாங்கி வருகிறோம். இந்த கஞ்சா பொட்டலங்களை கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்வோம். அதில் கிடைக்கும் பணத்தை ஜாலியாக செலவு செய்வோம் என்று கூறினர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. கடந்த வாரம் கோவையில் கஞ்சா விற்ற 2 பேர் கைதானார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுரையில் இன்று தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்…!!
Next post 7-வயது சிறுமியை ரூ.30 ஆயிரத்திற்கு விற்ற தந்தை…!!