சேயாவை கொலை செய்தது தானே என ‘கொண்டயாவின்’ சகோதரர் ஒப்புக்கொண்டுள்ளார்…!!
கொட்டதெனிய சேயா சந்தெவ்மி சிறுமி கொலை தொடர்பான பொறுப்பை தான் முழுமையாக ஏற்றுக்கொள்வதாக கொண்டயா எனும் துனேஷ் பிரியசாந்தவின் சகோதரன் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை குற்ற விசாரணை திணைக்களம் இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
இதேவேளை. ஏற்கனவே, விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கொண்டயாவின் தடுத்துவைப்பு காலம் எதிர்வரும் 19 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை நீதிமன்ற நீதிவான் டி.ஏ.ருவன் பதிரண முன்னிலையில் இன்று வழக்கு விசாரணை இடம்பெற்ற போதே இந்த தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கொண்டயான எனும் துனேஷ் பிரியசாந்த இன்று சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவரின் சகோதரர் குற்றவிசாரணை பிரிவினரால் மினுவாங்கொட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
கடந்த சனிக்கிழமை நீர்கொழும்பு பகுதியில் கைது செய்யப்பட்ட கொண்டயாவின் சகோதரர் சமன் ஜயலத் இன்று முதல் தடவையான நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
இந்த நிலையில், தாம் நீதிவான் முன்னிலையில், குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
இதனையடுத்து தமது உத்தியோகபூர்வ காரியாலயத்திற்கு அவரை அனுப்புமாறு நீதிவான் ரகசிய காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
அத்துடன், சமன் ஜயலத் தொடர்பில் மரபணுப் பரிசோதனை மேற்கொள்ள அவசியப்பாடு உள்ளதாக ரகசிய காவல்துறையினர் நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அனுமதி கிடைத்துள்ளது.
Average Rating