(படங்கள்) வவுனியா, பூனாவ பகுதியில் இரு பேரூந்துகள் மோதி விபத்து: 15 பேர் காயம்..!!
Read Time:1 Minute, 13 Second
வவுனியா, மதவாச்சி, பூனாவ பகுதியில் இரு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
அனுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற விமானப்படைக்குச் சொந்தமான பேரூந்தும், கிளிநொச்சியில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தும் மதவாச்சி, பூனாவ பகுதியில் ஏ9 வீதியில் இன்று காலை நேருக்கு நேர் மோதி தடம்புரண்டது.
இதன்காரணமாக இலங்னைப் போக்குவரத்துச் சபை பேரூந்தில் பயணித்த 15 பேர் காயமடைந்த நிலையில் மதவாச்சி, வவுனியா, அனுராதபுரம் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை மதவாச்சிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating