வியாசர்பாடியில் 11 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பல்…!!
சென்னை வியாசர்பாடி காந்திபுரத்தில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. நேற்று காலை 11.30 மணியளவில் ஒரு குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. காற்றின் வேகத்தால் மளமளவென அனைத்து குடிசைகளுக்கும் தீ பரவியது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வியாசர்பாடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குடிசைகளில் எரிந்த தீயை 1 மணிநேரம் போராடி அணைத்தனர். தீ விபத்தில் காயத்திரி, நவநீதம், மோகன் உள்பட 11 பேரின் குடிசைகள் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது. வீடுகளில் இருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்கள் தீக்கிரையாகின.
இதுபற்றி வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். தீ விபத்தில் குடிசை வீடுகளில் 2 கியாஸ் சிலிண்டர் வெடிக்காமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு வடசென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம், ஆர்.டி.சேகர் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர் களுக்கு உடனடி நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.5 ஆயிரம் பணம், 5 கிலோ அரிசி, வேட்டி-சேலை ஆகியவற்றை பெரம்பூர் தாசில்தார் வெங்கடராமன் வழங்கினார்.
Average Rating