லக்ஷபான மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து! விசாரணை ஆரம்பம்…!!
லக்ஷபான மின்சார உற்பத்தி மையத்தின் நிர்வாகக் கட்டடத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தேசிய மின் கட்டமைப்பிற்கு மின் விநியோகிக்கும் பிரதான மின் உற்பத்தி நிலையமான லக்ஷபான மின் உற்பத்தி நிலையத்தில் கடந்த 3ம் திகதி நள்ளிரவு 12 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட தொழில்நுட்ப மற்றும் பொறியியலாளர்கள் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருந்தனர்.
இந்த தீ விபத்தினால் மின்விநியோக மற்றும் விநியோக பணிகளுக்கு எவ்வித தடையும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட இழப்பு மற்றும் விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில் பாதிப்பு ஏற்பட்ட பகுதி தற்போது திருத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
Average Rating