14 வயது சிறுமியை ஏமாற்றி கற்பழித்த இந்திய மாலுமிக்கு 15 மாத ஜெயில் தண்டனை
Read Time:48 Second
இந்தியரான கஜேட்டன் பெர்னாண்டஸ். 30 வயதான இவர் அரோரா எனப்படும் ஒரு ஆடம்பர பயணிகள் கப்பலில் மாலுமியாக இருந்தார். அந்த கப்பலில் தன் பெற்றோருடன் பயணம் செய்த 14 வயது சிறுமியை ஏமாற்றி தனி அறையில் அடைத்து கற்பழித்து விட்டார். இந்த சம்பவம் மத்திய தரைக்கடலில் சென்றபோது நடந்தது. இந்த கப்பல் சவுத்தாம்ப்டன் நகருக்கு வந்து அடைந்ததும், அவர் கோர்ட்டில் பெர்னாண்டஸ் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 15 மாத ஜெயில் தண்டனை விதித்தார்.