மருத்துவமனையின் அலட்சியத்தால் நிகழ்ந்த விபரீதம்: உயிருடன் இருக்கும் தாயாருக்கு ஈமச்சடங்கு செய்ய முயன்ற மகள்…!!

Read Time:3 Minute, 43 Second

britan_alive_002பிரித்தானியா நாட்டில் மருத்துவமனை ஊழியர்கள் தவறான தகவல் அளித்ததால் உயிருடன் இருந்த தாயாருக்கு ஈமச்சடங்குகள் நடத்த மகள் ஏற்பாடுகள் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள டோர்செஸ்டர் என்ற நகரில் லிஸ் பேஜ் என்ற பெண் தனது கணவர் மற்றும் தாயாரான பில்லிஸ் லில்லி(94) ஆகியவர்களுடன் வசித்து வந்துள்ளார்.

உடல்நலம் குன்றியிருந்த தாயாருக்கு கடந்தாண்டு மார்ச் மாதம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

மயக்கமடைந்த தனது தாயாரை லிஸ் பேஜ் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளார்.

தாயாருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் ஒரு நாள் இரவு நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக தொலைபேசி மூலமாக தகவல் அளித்தனர்.

தாயாரின் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த லிஸ் பேஜ் தனது கணவருடன் இரவோடு இரவாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இருள் சூழ்ந்துள்ள படுக்கை அறையில் உடல் ஒன்று கிடத்தப்பட்டுருக்கு அது தான் இறந்துபோன அவருடைய தாயார் என மருத்துவ ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

உடலிற்கு அருகில் சென்ற லிஸ் பேஜ், அதன் உச்சந்தலையில் கண்ணீருடன் முத்தமிட்டுவிட்டு, அழுதுக்கொண்டே கணவருடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

மறுநாள் காலையில், தாயாரை அடக்கம் செய்யும் பொருட்டு அதற்கான ஈமச்சடங்குகளை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, அவருக்கு திடீரென மருத்துவமனையில் இருந்த ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது.

அதில், லிஸ் பேஜ்ஜின் தாயார் இறக்கவில்லை என்றும், தற்போது மருத்துவ சிகிச்சையில் தான் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தகவலால் மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்த லிஸ் பேஜ் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது அவரது தாயார் உயிருடன் இருப்பதை கண்டு உற்சாகம் அடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய மருத்துவர்கள், லிஸ் பேஜ்ஜின் தாயார் பெயர் உடைய மற்றொரு நோயாளி இறந்துவிட்டதால், இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறினர்.

மேலும், மருத்துவமனையின் தவறிற்கு மன்னிப்பு கோருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதும் சிகிச்சை பெற்று வரும் தனது தாயாரிடம் இந்த சம்பவம் குறித்து எதையும் வெளிப்படுத்தவில்லை என கூறியுள்ளார்.

ஒரு வருடத்திற்கு பிறகு இங்கிலாந்து நாட்டு செய்தி நிறுவனம் ஒன்றிற்கு லிஸ் பேஜ் இன்று பேட்டியளித்துள்ளதால், இந்த சம்பவம் தற்போது வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (படங்கள்) கடும் புயலில் சிக்கி தவித்த மக்கள்: இரக்கமின்றி பொருட்களை திருடிச் சென்ற கும்பல்…!!
Next post மாணவர்களை குற்றவாளிகள் போன்று நடத்தும் பொறியியல் கல்லூரி: குமுறும் மாணவர்கள் (வீடியோ இணைப்பு)…!!