மாணவர்களை குற்றவாளிகள் போன்று நடத்தும் பொறியியல் கல்லூரி: குமுறும் மாணவர்கள் (வீடியோ இணைப்பு)…!!

Read Time:2 Minute, 5 Second

torture_college_officials_001சென்னையில் ஆடை கட்டுப்பட்டை விதித்த தனியார் பொறியியல் கல்லூரி தற்போது மாணவர்களை குற்றவாளிகள் போன்று நடத்துவதாய் புகார் எழுந்துள்ளது.
சென்னையில் அமைந்துள்ள சாய் ராம் பொறியியல் கல்லூரி நிர்வாகம் சில வாரங்களுக்கு முன்னர் மாணவர்களுக்காக சுற்றறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில் மாணவியர் லெக்கின்ஸ், குதிகால் காலணிகள் உள்ளிட்ட எதுவும் கல்லூரிக்குள் அணிந்துவர அனுமதிக்க முடியாது என தெரிவித்திருந்தனர்.

இது சமூக வலைதளம் தொடங்கி சமூக ஆர்வலர்கள் பலர் பல்வேறு ஊடகங்களில் விவாதிக்கும் அளவிற்கு பூதாகரமானது.

இந்நிலையில், அந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தின் இன்னொரு கொடூர முகத்தை அம்பலப்படுத்தியுள்ளனர்.

கல்லூரியின் அடக்குமுறை சட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பும் மாணவர்களை கல்லூரி நிர்வாகம் கடுமையாக தண்டிப்பதாக அந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களை உடல் ரீதியாக துன்புறுத்தவே கல்லூரியில் தனியாக அறை இருப்பதாகவும் மாணவர் பகீர் குற்றச்சட்டை முன்வைத்துள்ளனர்.

சில மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தின் இதுபோன்ற செயல்களால் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கே வந்துள்ளதாக தெரிவித்துள்ளது

சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மருத்துவமனையின் அலட்சியத்தால் நிகழ்ந்த விபரீதம்: உயிருடன் இருக்கும் தாயாருக்கு ஈமச்சடங்கு செய்ய முயன்ற மகள்…!!
Next post காதலியை கேடயமாக வைத்து ரூ.5கோடி கேட்டு தொழில் அதிபர் மகன் காரில் கடத்தல்: 6 பேர் கைது…!!