ஜப்பான் நாடாளுமன்றில் பிரதமர் ரணில் உரை! முதலீடு செய்ய வருமாறு அழைப்பு…!!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜப்பான் நாடாளுமன்றத்தில் தற்போது தனது உரையினை ஆரம்பித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் இந்தியா பிரதமர் நரேந்திர மோடிக்கு பின்னர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் உலகின் மூன்றாவது தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய பாதையில் பயணம் செய்யும் இலங்கையின் முதலீட்டிற்காக இணையுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜப்பான் வர்த்தகர்களிடம் கோரியுள்ளார்.
தற்போது வரையில் இலங்கையில் எல்லாவற்றையும் விட பொருளாதாரம் வலுவடைந்துள்ளதாக ஜப்பான் நாடாளுமன்றில் பிரதமர் தற்போது குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் நல்லிணக்கம் மற்றும் பொருளாதார ஏற்றத்தை மேம்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஜப்பானின் ஆதரவு அவசியம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் மேலும் ஒரு சந்திப்பு இன்று மாலை இடம்பெறவுள்ளது.
Average Rating