போதைப் பொருளுக்கு அடிமையான தந்தை: குடும்பத்தை சீரழிப்பதாக கூறி கத்தியால் தாக்கிய மகன்…!!
போதைப்பொருளுக்கு அடிமையான தந்தையை, குடும்பத்தை சீரழிப்பதாக கூறி மகன் மூர்க்கத்தனமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் Heywood பகுதியில் குடியிருந்துவரும் 52 வயதான Graham Clarke எனபவர் ஹெராயின் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது.
அவரது மகனான 34 வயது James Clarke இதுகுறித்து பல முறை கண்டிக்கவும் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஏற்பட்டும் வந்துள்ளார்.
இந்நிலையில், தமது தந்தையை வாய்ப்பு கிடைத்தால் கொலை செய்ய இருப்பதாக உறவினர் ஒருவரிடம் கூறிய James,
தமது தாய்மாமன் வீட்டில் வைத்து கத்தி உடையும் மட்டும் ஆத்திரம் கொண்டு 18 முறை தாக்கியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் கைதான James தமது குடும்பத்தை சீரழித்த காரணங்களாலேயே தந்தையை கத்தியால் தாக்கியதாக தெரிவித்துள்ளார்.
தமது தாய் மற்றும் சகோதரிக்கும் போதைப்பழக்கத்தை அறிமுகப்படுத்தி அவர்கள் சாவுக்கும் காரணம் தமது தந்தை Graham மட்டுமே என தெரிவித்துள்ள James,
சிறு வயதில் போதைப்பொருள் வாங்கும் பொருட்டு தம்மை திருட வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது தாயின் மறைவிற்கு பின்னர் தந்தையுடனான உறவை James முற்றிலுமாக குறைத்துக்கொண்டுள்ளார்.
இதனிடையே தமது மகனும் ஹெராயின் பயன்படுத்தி வருகிறான் எனவும் அந்த தாக்கத்தின் காரணமாகவே தம்மை கொலை செய்ய முயன்றதாகவும் Graham பொலிசில் தெரிவித்துள்ளார்.
Average Rating