வங்காள தேசத்தில் பாதிரியார் மீது மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல்…!!
வங்காள தேசத்தில் பாதிரியார் ஒருவர் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் 3 பேர் கத்தியால் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பாப்னா பகுதியைச் சேர்ந்த லுகே சர்கெர்(52) அங்குள்ள சர்ச் ஒன்றில் பாதிரியாராக இருந்து வருகிறார். கிறிஸ்தவம் குறித்து கற்றுக் கொள்ள விரும்புவதாக கூறி நேற்று 25 முதல் 30 வயதிலான 3 இளைஞர்கள் அவரிடம் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த கத்தியை கொண்டு பாதிரியார் சர்கெர்ரை சரமாரியாக தாக்கியதோடு, அவரது கழுத்தையும் அறுக்க முயற்சித்தனர்.
பாதிரியாரின் கதறல் சத்தம் கேட்டதும் அருகில் இருந்தவர்கள் அவரது வீட்டிற்கு விரைந்துள்ளனர். மக்கள் வருவதை அறிந்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றனர்.
முன்னதாக, இத்தாலி மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த இருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, பாதிரியார் மீது மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது
Average Rating