சேலம் அருகே நண்பர்கள் மோதல்: ரெயிலில் தள்ளி வாலிபர் கொலை…!!

Read Time:3 Minute, 37 Second

87ba5e58-b1bb-4664-9312-5d7117788b83_S_secvpfசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது விநாயகபுரம். இந்த ஊரின் வழியாக செல்லும் ரெயில்வே தண்டவாளத்தின் அருகே சுமார் 22 வயது மதிக்க தக்க வாலிபர் முகத்தில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இன்று காலையில் இதனை கண்ட விநாயகபுரம் ஊர் மக்கள் ஆத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஆத்தூர் கண்ணாடி மில் பகுதியை சேர்ந்த சரவணன் மகன் வினோத்குமார் (வயது 22) என்பதும், தச்சு தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

இதற்கிடையே சம்பவ நடந்த இடத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கூடி விட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வினோத்குமார் இறந்த தகவலை அறிந்ததும் தந்தை சரவணன், தாய் சுமதி, தம்பி மணிகண்டன் மற்றும் உறவினர்கள் மருத்துவ மனைக்கு திரண்டு வந்தனர். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

அப்போது பெற்றோர் கூறுகையில், நேற்று வினோத்குமார் வெளியே சென்று விட்டு வருவதாக எங்களிடம் கூறி விட்டு சென்றார். அதன் பிறகு இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை.

பல்வேறு இடங்களில் மகனை தேடி பார்த்தோம். உறவினர் வீடுகளுக்கு சென்றிருப்பார் என்று நினைத்து போனில் தொடர்பு கொண்டு கேட்டோம். ஆனால் அங்கும் அவர் செல்லவில்லை.

வழக்கமாக நண்பர்களை பார்க்க சென்றால் தாமதமாக தான் வீட்டிற்கு வருவார் என்று நினைத்து தேடுவதை நிறுத்தி விட்டு, வீட்டுக்கு வந்தோம்.

இன்று காலையில் எங்கள் மகன் இறந்து விட்டதாக தகவல் வந்தது. இது எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

வினோத்குமாருக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். நண்பர்களை பார்க்கச் சென்ற போது தான் எனது மகனை கொன்று உள்ளனர். மகன் வினோத்குமாரை கொலை செய்து தண்டவாளத்தின் அருகே வீசி விட்டு சென்றுள்ளனர்.

கொலை செய்தவர்கள் யார்? என்று கண்டுபிடித்து அவர்களை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எனினும் பிரதே பரிசோதனை முடிவில் தான் முழு விபரங்களும் தெரிய வரும்.

நண்பர்களுடன் ஏற்பட்ட மோதலில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுப்பெண் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது…!!
Next post கோவை அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளி தொடையில் கத்திரிக்கோல் வைத்து தைத்ததாக பரபரப்பு: டாக்டர்கள் விளக்கம்…!!