முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கைது…!!
Read Time:1 Minute, 3 Second
முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் அமைச்சரை கைது செய்துள்ளனர்.
1999ம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புலனாய்வுப் பிரிவினர் தமது தந்தையை கைது செய்துள்ளதாக பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
ஜனக பண்டார தென்னக்கோன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக செயற்பட்டு பின்னர்ää முன்னாள் ஜனாதபதி மஹிந்த ராபஜக்ஸவிற்கு ஆதரவாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிற்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating