அமெரிக்காவில் விஷஊசி போட்டு கொள்ளையனுக்கு மரண தண்டனை..!!
அமெரிக்காவின் டெக்கால் மாகாணத்தை சேர்ந்தவர் ஜூயான் கார்சியா (35). கொள்ளையனான இவர் கடந்த 1992–ம் ஆண்டு ஒருவரை சுட்டுக் கொன்று அவரிடம் இருந்து 8 டாலர் அமெரிக்க பணத்தை கொள்ளையடித்தார்.
எனவே, கைது செய்யப்பட்ட இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்தது. அதை தொடர்ந்து அவர் கடந்த 17 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அவரது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவில் மரண தண்டனை கைதிகள் விஷஊசி போட்டு கொல்லப்படுகின்றனர். எனவே, டெக்சால் சிறையில் வைத்து இவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்காவில் டெக்கால் மாநிலத்தில் தான் அதிக அளவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 11 பேர் விஷஊசி மூலம் கொல்லப்பட்டுள்ளனர்.
சமீப காலமாக அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் விஷ ஊசிக்கான மருந்து சப்ளை செய்வதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தி விட்டன. இருந்த போதிலும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட விஷ மருந்து மூலம் தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது.
Average Rating