சித்தாமூர் அருகே போலி டாக்டர்கள் 2 பேர் கைது…!!
Read Time:1 Minute, 18 Second
மதுராந்தகம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சர்மிஸ்ரா. இவர் சித்தாமூர் போலீசில் புகார் அளித்தார்.
அதில் ‘‘நுகும்பல் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி, பெரியகளக்காடியை சேர்ந்த பாண்டியன் ஆகியோர் போதிய மருத்துவ கல்வியின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறி இருந்தார். இது குறித்து சப்–இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் விசாரணை நடத்தினார். அப்போது மூர்த்தியும், பாண்டியனும் மருத்துவ கல்வியின்றி வீட்டில் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
Average Rating