கண்டி:கைவிடப்பட்ட நிலையில் சிசு மீட்பு..!!
Read Time:1 Minute, 20 Second
கண்டி – பேராதெனிய பகுதியில் வீதி ஓரத்தில் கைவிடப்பட்ட நிலையில் உயிருடன் சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியில் சென்ற நபர் ஒருவர் குறித்த சிசுவை கண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து பொலிஸார் சிசுவை மீட்டுள்ளனர்.
சிசு மீட்கப்பட்ட இடத்தில் இருந்து குறித்த சிசுவின் தாய் எழுதிய கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் சிசுவை வளர்ப்பதற்கு சிரமப்படுவதனால் இவ்வாறு வீதியில் விடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சிசு தற்போது பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குறித்த சிசு 17 நாட்களுக்கு முன் பிறந்திருக்கலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating