பல தடவைகள் முயன்று தற்கொலை செய்து கொண்ட வயோதிபர்…!!
பல தடவைகள் தற்கொலை செய்ய முயன்றவர் இன்று காலை புகையிரத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதன் மூலம் தனது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் திருநகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தேவசகாயம் ஏனோல்ட் வயது 82 என்பவரே இன்று காலை 6.40 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற யாழ் தேவி புகையிரத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டவராவார்.
இவருடைய சடலம் உடனடியாக மோதிய புகையிரதத்தின் பாதுகாவலர்களினால் அதே புகையிரத்தில் எடுத்து செல்லப்பட்டு நாவற்குழி புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
நாவற்குழி புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது. நீதிமன்ற பணிப்புரைக்கு அமைவாக யாழ் போதனா வைத்தியசாலையில் மரண விசாரனை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரனையைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
விசாரனையின் போது கடந்த இரண்டு வருடங்களாக மனம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும் அடிக்கடி சாகப் போவதாக கூறி வந்துள்ளார் இந்நிலையில் ஒரு தடவை தன்னைத்தானே வயிற்றில் கத்தியால் குத்தி தற்கொலை செய்ய முயன்றதாகவும் கடந்த ஆறு மாத காலத்திற்கு முன்னர் கழுத்தை பிளேட்டினால் வெட்டி தற்கொலை செய்ய முயன்றதாகவும் சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
Average Rating