படிக்கட்டில் பயணம்: ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்…!!

Read Time:1 Minute, 33 Second

child_escaped_001தமிழகத்தில் ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த ஏழு மாத குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது.

திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி சென்ற பேருந்தில் ஏழு மாத குழந்தையுடன் பெற்றோர் பயணம் செய்துள்ளனர்.

பேருந்தில் இடமில்லாத காரணத்தால் படிக்கட்டில் பயணம் செய்துள்ளனர், இரவு நேரம் என்பதால் பெற்றோர் அயர்ந்து தூங்கவே பெற்றோரின் கையிலிருந்து குழந்தை தவறி கீழே விழுந்தது.

அந்த வழியே சென்ற வேன் டிரைவர் குழந்தையை காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார், அத்துடன் பொலிசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே குழந்தை இல்லாததை கண்டு திடுக்கிட்ட பெற்றோர், அருகிலுள்ள வச்சகாரம்பட்டி கிராம பொலிஸ் அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர்.

அப்போது குழந்தை மருத்துவமனையில் இருப்பதை பொலிசார் தெரிவித்துள்ளனர், மேலும் குழந்தை நலமாக இருப்பதாகவும், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சித்தாமூர் அருகே போலி டாக்டர்கள் 2 பேர் கைது…!!
Next post முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி திருமணம்: அரிய வீடியோ பதிவு…!!