சேயா வழக்கில் கைதாகி விடுவிக்கபட்ட சிறுவன் குறித்த முறைப்பாடு விசாரணை..!!
Read Time:1 Minute, 10 Second
சிறுமி சேயா கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 17 வயது மாணவன் குறித்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடு பற்றி விசாரணை செய்ய இன்று சிலர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி மாணவன், அவரது தாயார், கொடதெனியா பிரதேசத்திற்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அதிகாரி, கொடதெனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் சிறுமியின் கொலையுடன் தொடர்புடையதாக கூறப்பட்டு கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்ட மற்றொரு நபருமே இவ்வாறு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை 10.30 அளவில் இவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
Average Rating