நான்கு வயது குழந்தையை காட்டில் வீசிய தந்தை விளக்கமறியலில்..!!
Read Time:1 Minute, 14 Second
அங்குராங்கெத்த – ரிக்கில்லகஸ்கட – கடுகஸ்ஹின்ன பிரதேசத்தில் நான்கு வயதான ஆண் குழந்தையை காட்டில் வீசி தப்பிச் சென்றமை தொடர்பில் கைதான தந்தை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த குழந்தையை கண்டி பிரதேச சிறுவர் காப்பகத்திடம் கையளிக்குமாறு நீதிமன்றம் காவற்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய குழந்தை மற்றும் சந்தேகத்துக்குரிய தந்தை நேற்று வலப்பனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
எதிர்வரும் ஜனவரி மாதம் தாம் மீண்டும் திருமண முடிக்க உள்ளதாகவும் அதற்கு குறித்த குழந்தை தடையாக இருப்பதன் காரணமாக காட்டில் வீச முற்பட்டதாகவும் சந்தேகத்துக்குரிய தந்தை காவற்துறையினரிடம் தெரிவித்துள்ளார்
Average Rating