ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது..!!
Read Time:48 Second
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து நேற்று முன்தினம் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி மட்டக்களப்பிலுள்ள தேவாலயமொன்றினுள் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார்.
Average Rating