உள்ளுராட்சி நிறுவனங்கள் அரசிற்கு பல மில்லியன் ரூபாய்கள் செலுத்த வேண்டும்..!!
உள்ளுராட்சி நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு 659 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக உடனடியாக குறித்த நிதியை செலுத்தாத உள்ளுராட்சி மன்றங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பைசர் முஸ்தபா அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களுக்கு அபிவிருத்தி செயற்திட்டங்களுக்காக தேசிய கடன் மற்றும் அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக கடன் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய கடன் மற்றும் அபிவிருத்தி நிதியம் உள்ளுராட்சி மன்றங்களுக்கு கீழே இயங்குகின்றது.
இதற்கான நிதி திறைசேரியில் இருந்தே வழங்கப்படுகின்றது.
உள்ளுராட்சி மன்றங்களில் பெரும்பாலான நிதி தம்புள்ள மாநகர சபையினாலே செலுத்தப்பட வேண்டியுள்ளது.
இதன் மூலம் 118 மில்லியன் ரூபா செலுத்தப்படவுள்ளது.
இதுதவிர, பலாங்கொட நகர சபை மற்றும் கம்பளை நகர ஆகியவற்றினால் பாரிய தொகை, கடனாக செலுத்தப்படவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
Average Rating