தீவிரவாதியின் பிணத்தை வேனில் கட்டி இழுத்துச்சென்ற துருக்கி பொலிசார்: வெளியான புகைப்படங்கள்..!!
Read Time:1 Minute, 23 Second
குர்திஷ் தீவிரவாதியின் பிணத்தை வேனில் கட்டி இழுத்துச்சென்ற பொலிசாரின் செயல் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.
தென் கிழக்கு துருக்கியில் உள்ள சிர்னாக் மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று துருக்கி பாதுகாப்பு படையினருக்கும், குர்திஷ்தான் தொழிலாளர் கட்சிக்கும் (PKK) இடையே நடந்த மோதலில், குர்திஷ் தீவிரவாதிகளுக்கு ஆதரவான மக்கள் ஜனநாயகக் கட்சி (HDP) எம்.பி.யின் உறவினர் ஹசி லோக்மன் பிர்லிக்(24) என்பவர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், கொல்லப்பட்ட பிர்லிக்கின் பிணத்தை துருக்கி பொலிசார் தங்கள் வேனின் பின்னால் கயிற்றால் கட்டப்பட்டு, சிர்னிக் வீதிகளில் இழுத்துச் செல்லப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இது மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Average Rating