சிக்கிம் மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் 3 சிறுமிகள் கற்பழிப்பு

Read Time:1 Minute, 36 Second

சிக்கிம் மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் 3 சிறுமிகளை கற்பழித்து அதில் ஒருவரை கொலை செய்துள்ளனர். சிக்கிம் மாநிலத்தின் தெற்கில் உள்ள கசிட்டார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் உஜ்ஜால் தர்ஜி (7). இந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த சந்தன் கவுரங் (20) என்பவன் கற்பழித்து விட்டார். மருத்துவப் பரிசோதனையில் சிறுமி கற்பழிக்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து போலீசார் கவுரங்கை கைது செய்தனர். இதேபோல மேற்கு சிக்கிமில் உள்ள சிங்யான் – பெல்லிங் என்ற இடத்தில் 12 வயது சிறுமி கடந்த 13ம் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தார். சிறுமியின் உடலை கண்டெடுத்த போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அந்த சிறுமி கற்பழிக்கப்பட்டது தெரிய வந்தது. இதே போன்று தெற்கு சிக்கிமில் கடந்த 9ம் தேதி 14 வயது சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டுள்ளார். சிறுமியை கற்பழித்தவனை போலீசார் கைது செய்துள்ளனர். ஒரே மாநிலத்தில் தொடர்ந்து 3 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்காக கரீனா ஆட்டம்!
Next post காதலி ஏமாற்றியதாக நீதிமன்றத்தில் நஷ்டஈடு கேட்கும் காதலன்