சுவிஸில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கர்ப்பிணி பெண்..!! (படங்கள்)

Read Time:2 Minute, 28 Second

fire_001சுவிட்சர்லாந்து நாட்டில் வீடு ஒன்று எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்த விபத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சுவிஸின் Solothurn மண்டலத்தில் Olten நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இன்று காலை 8 மணியளவில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

வீட்டின் கூரை மீது கொளுந்து விட்டு எரிந்த தீ வேகமாக அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியுள்ளது.

இந்நிலையில், தீவிபத்து நிகழ்ந்த வீட்டிற்கு மிக அருகில் வசித்து வரும் கர்ப்பிணி ஒருவர் கூறுகையில், அதிகாலை நேரத்தில் தான் மிகவும் தூக்கத்தில் இருந்தபோது ஒருவித வெப்பம் பரவுவதை உணர்ந்தேன்.

உடனடியாக வீட்டின் மாடத்திற்கு வந்து பார்த்தபோது பக்கத்து வீடு தீப்பற்றி எரிந்துக்கொண்டுருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

தீயின் வெப்பம் வயிற்றிற்குள் இருக்கும் குழந்தையை பாதித்துவிடும் என்பதால், வீட்டிலிருந்து முக்கிய பொருட்களை எடுத்துக்கொண்டு உடனடியாக வெளியேறி விட்டதாக கூறினார்.

தீ விபத்து நிகழ்ந்த நேரத்தில் தகவல் பெற்று வந்த 30 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்து ஏற்பட்டதன் காரணம் தெரியவராத நிலையில், விபத்து குறித்து அந்நகர பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தீ விபத்து ஏற்பட்டு அருகில் இருந்த குடியிருப்புகளுக்கும் தீ பரவியதால், 4 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றை சீரமைக்க ஒரு லட்சம் பிராங்குகள் வரை செலவாகும் என அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனர்.

fire_002

fire_003

fire_004

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கைப் பணிப் பெண் மீது குவைத்தில் கடுமையாக தாக்குதல்..!!
Next post மனைவியின் தலையை வெட்டி சாலையில் எடுத்து சென்ற முதியவர் (வீடியோ இணைப்பு)