மனைவியின் தலையை வெட்டி சாலையில் எடுத்து சென்ற முதியவர் (வீடியோ இணைப்பு)
Read Time:1 Minute, 9 Second
புனேயில் நபர் ஒரு வர் மனைவியின் தலையை வெட்டி ஒரு கையில் எடுத்துக் கொண்டு சாலையில் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், ராமு சவான் (60) என்ற முதியவர் ஒருவர் தனது மனைவியின் தலையை வெட்டி ஒரு கையில் எடுத்துக் கொண்டு, மற்றொரு கையில், தலையை வெட்டப் பயன்படுத்திய கத்தியோடு காவல்நிலையத்துக்குச் சென்றார்.
அவரைப் பார்த்து சாலையில் சென்றவர்கள் அதிர்ந்து போயினர். கட்ராஜ் என்ற பகுதியில் காவலாளியாக வேலை செய்து வந்த அவர், அவரது 55 வயதான மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தில், அவரது தலையை வெட்டியுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த பொலிசார், உடனடியாக சவானிடம் இருந்து தலையை பறிமுதல் செய்து அவரை கைது சென்றனர்.
Average Rating