முதியவரின் காலில் கத்திரிக்கோலை வைத்து தைத்த வைத்தியர்கள்..!!
சத்திர சிகிச்சையின் போது, தவறுதலாக முதியவரின் காலில் கத்திரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் கோவையில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
கோவை இராமாநாதபுரம் பகுதியை அடுத்த கல்லுமடையை சேர்ந்தவர் கருப்புசாமி கடந்த மாதம் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கால் தடுமாறி கீழே வீழ்ந்த போது அவரது இடது காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
நடக்க முடியாமல் அவதிப்பட்ட அவருக்கு கோவை அரச வைத்தியாசலையில் சத்திரச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 15 நாட்கள் கழித்து அவருக்கு மீண்டும் காலில் வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து வைத்தியர்களிடம் தெரிவித்தார்.
அப்போது அவருக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்து பார்த்த போது அவரது காலில் கத்திரிக்கோல் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் வைத்தியசாலைக்கு அவப்பெயர் வந்து விடும் என நினைத்த வைத்தியர்கள், உடனடியாக மீண்டும் அவரது காலில் அறுவை சிகிச்சை செய்து அந்த கத்திரிக்கோலை அகற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating