அயலவரை கத்தியால் வெட்டச் சென்றவர் கைது: உடுவில் பகுதியில் சம்பவம்…!!

Read Time:2 Minute, 2 Second

knife_001கத்தியால் அயலவரை வெட்டச் சென்ற ஒருவர், உறவினர்கள் கூடியதும் மோட்டார் சைக்கிளையும் கைவிட்டு ஒடி தென்னை மரத்தில் ஏறி மறைந்திருந்த நிலையில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 7.30 மணியளவில் உடுவில் அம்மன் கோவிலடிப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

குறிப்பிட்ட நபருக்கு அயலில் கடை வைத்திருப்பவருடன் நீண்டகாலமாக பகைமை இருந்து வந்துள்ளது.

இந் நிலையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் கத்தியையும் கொண்டு கடைக்காரரின் கடைக்கு சென்றுள்ளார்.

நிலைமையை உணர்ந்த கடைக்காரர் உறவினர்களை உதவிக்கு அழைத்துள்ளார். உறவினாகள் வருவதைக் கண்டதும் குறிப்பிட்ட நபர் கத்தியுடன் தென்னை மரத்தில் ஏறி மறைந்து இருந்துள்ளார்.
சம்பம் தொடர்பாக சுன்னாகம் பொலிசாருக்கு தொவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிசார் குறிப்பிட்ட இடத்திறக்கு சென்று பொது மக்களுடன் இணைந்து தேடியுள்ளார்கள்.

இந் நிலையில் தென்னைமரத்தில் மறைந்து இருப்பதைக் கண்ட பொலிசாரும் பொது மக்களும் அவரை தென்னை மரத்தில் ஏறி இறக்கியதுடன், கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர் சுமார் 20 வயது நிரம்பிய ஒரு பிள்ளையின் தந்தையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பூட்டியிருந்த வீட்டை திறந்து பெருமளவு தங்க நகைகள் கொள்ளை! யாழில் துணிகரம்..!!
Next post பெண்கள் எதற்காக கேரட் சாப்பிட வேண்டும்…!!