அமெரிக்காவில் தாயை சுட்டுக்கொன்று இதயத்தை எடுத்த மகன்…!!

Read Time:1 Minute, 54 Second

60ab0360-ba77-4e23-b4e2-baf8f043ac09_S_secvpfஅமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை சேர்ந்தவர் நய்லா (64). இவர் கணித ஆசிரியை ஆக பணிபுரிந்தார். அவரது மகன் ஓமர் பெட்டிகன் (31).

நய்லா உடல் வலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக நிறைய வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். நாளடைவில் அதற்கு அடிமையாகி விட்டார். அது அவரது மகன் ஓமருக்கு பிடிக்கவில்லை.

இதுகுறித்து தனது தாயார் நய்லாவுடன் வாக்குவாதம் செய்தார். அதை தொடர்ந்து இருவருக்கும் நடந்த சண்டையில் ஆத்திரம் அடைந்த ஓமர் தனது துப்பாக்கியால் நெய்லாவை சுட்டுக்கொன்றார்.

அத்துடன் அவரது வெறி அடங்கவில்லை. தாய் நய்லாவின் கழுத்தில் இருந்து மார்பு வரை கத்தியால் அறுத்து அவரது இதயத்தை வெளியே எடுத்தார். பின்னர் மீண்டும் அதே இடத்தில் வைத்து விட்டு தலைமறைவாகி விட்டார்.

இதற்கிடையே மெக்சிகோவில் வாழும் ஆசிரியை நய்லாவின் கணவர் தனது மனைவி, மகனை சில நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை என போலீசில் புகார் செய்தார். உடனே வீட்டுக்கு சென்ற போலீசார் நய்லா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

பின்னர் மகன் ஓமர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை கைது செய்தனர். அதை தொடர்ந்து தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர் போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விழுந்தால் அழியும் ஆபத்து: பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்…!!
Next post கணவரின் குடிபழக்கத்தால் குழந்தைகளை கொன்றேன்: தற்கொலைக்கு முயன்ற பெண் வாக்குமூலம்..!!