தந்தையின் உந்துருளியில் சிக்கி மகன் பலி…!!
Read Time:47 Second
கல்முனை பகுதியில் தந்தை ஒருவரது உந்துருளியில் மோதுண்ட 8 வயதான மகன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த உந்துருளியை வீட்டில் உள்ள வாகனதரிப்புக்குள் நிறுத்த முற்பட்ட போது, அதில் மோதிய மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் அவர் சிகிச்சைப் பலன் இன்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தினால் அதிர்ச்சிக்குள்ளான தந்தை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Average Rating