ராஜஸ்தானில் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி: 3 வீடுகள் தரைமட்டம்…!!
Read Time:1 Minute, 4 Second
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் நகரில் நிகழ்ந்த சிலிண்டர் விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 3 வீடுகள் முற்றிலும் தரைமட்டமாகியுள்ளது.
குடியிருப்பு பகுதி ஒன்றில் இன்று காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சமையல் செய்து கொண்டிருந்த போது, எரிவாயு சிலிண்டர் தீப்பிடித்து, பின் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.
இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களில் 4 பேர் 30 வயதிற்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating