மனோரமா காலமானார்…!!

Read Time:2 Minute, 29 Second

actress-Manorama-passed-away1தென்னிந்திய சினிமாவின் பழம் பெரும் நடிகை மனோரமா (78) காலமானார்.

அவர் நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பால் காலமானதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாதுரை, கருணாநிதி போன்றவர்களுடன் மேடை நாடக நடிகையாக நடித்து, பின்னர் தமிழ் திரை உலகில் 1000 திரைப்படங்களுக்கும் அதிகமாக நடித்துள்ளார்.

ஆச்சி என்று அழைக்கப்பட்டு வந்த நடிகை மனோரமா, மறைந்த நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், நாகேஷ் ஆகியவர்களுடனும், ரஜினி, கமல் ஆகியோருடனும், தற்போதைய இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றுள்ளார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் பிறந்த இவரின் இயற்பெயர் கோபிசாந்தா.

1963ல் வெளிவந்த ‘கொஞ்சும் குமரி’ என்ற படத்தில் நடிகையாக மனோரமா அறிமுகமானார்.

‘கண் திறந்தது’ படக் கதாநாயகன் எஸ்.எம்.ராமநாதனுடன் மனோராமா திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.

‘குன்வர பாப்’ என்ற இந்தி படத்தில் மெகமூத் என்ற பாலிவுட் காமெடி நடிகருடன் நடித்துள்ளார்.
இவர் கடைசியாக நடித்து வெளியாகிய திரைப்படம் ‘பொன்னர் சங்கர்.
மனோரமா தமது திரைப்பட வாழ்க்கையில், வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர்விருது, பத்மஸ்ரீ ,தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுபோதையிலுள்ள சாரதியை கண்டுபிடிக்க நவீன பலூன்…!!
Next post மனநிலை பாதித்த இளம்பெண் பாலியல் பலாத்காரம்: 50 வயது காமக்கொடூரனுக்கு வலை..!!