இரசாயன கலவையை குடித்த குழந்தை: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி…!!
பிரித்தானியாவில் குழந்தை ஒன்று ஆபத்தான இரசாயன கலவையை குடித்துள்ளதால் கடுமையான தீக்காயங்களுடன் பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பிரித்தானியாவின் Birmingham பகுதியில் குடியிருந்து வருபவர் Jimmy and Deanne குடும்பத்தினர்.
சம்பவத்தன்று ஜிம்மியுடன் விளையாடிக்கொண்டிருந்துள்ளார் அவரது பிஞ்சு குழந்தையான Elijah Mole.
Mobile games devoloper ஆன ஜிம்மி வீட்டை சுத்தப்படுத்தும் பொருட்டு மும்முரமாக இருந்துள்ளார்.
திடீரென Elijah அலறிய சத்தம் கேட்டு திரும்பிய ஜிம்மி அதிர்ச்சியில் ஒரு நொடி உறைந்து போயுள்ளார்.
தமது பிஞ்சு குழந்தை முகமெல்லம் காயங்களுடன் அலறுவது கண்டு உடனடியாக மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற குழந்தை Elijah தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டை சுத்தமாக்கும் பொருட்டு ஜிம்மி Oven Cleaner இரசாயனத்தை குழந்தைக்கு கையெட்டும் தூரத்தில் வைத்திருந்த்தாக கூறப்படுகிறது.
ஜிம்மியின் பார்வை விலகிய ஒரு நொடியில் குழந்தை அந்த இரசாயனத்தை எடுத்து குடித்துள்ளது.
இதனால் கடுமையான கொப்புளங்களும் சிறுநீரக பழுதும் ஏற்பட்டு குழந்தை Elijah அவதிக்குள்ளாகியுள்ளது.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் குழந்தை Elijah தற்போது குணம் பெற்று வருவதாகவும், நடந்த நிகழ்வுக்கு தாமே காரணம் எனவும் Jimmy வருத்தம் தெரிவித்துள்ளார்.
Average Rating