லண்டனில் தலைப்பாகையால் உயிர் பிழைத்த சீக்கியர்…!!
இங்கிலாந்தின் நாட்டிங்காம் நகரில், இந்தியாவை சேர்ந்த 42 வயதான குர்பால் சிங் என்ற சீக்கியர் கடை ஒன்றினை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவரது கடைக்கு ரோனால்ட் ரிச்சர்சன் என்பவர் மதுபாட்டில் வாங்க வந்துள்ளார். அப்போது, அந்த நபர் சில சாக்லெட்டுகளை திருடி தனது பைக்குள் போட்டதை கடையின் ஊழியர்கள் கண்டு பிடித்துள்ளனர். இதனால், அவர் திருடிய சாக்லெட்டுகளுக்கு பணம் கேட்டுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில், சீக்கியர் குர்பால் சிங் மீது, அந்த நபர் கையில் வைத்திருந்த விஸ்கி பாட்டிலால் கடுமையாக தாக்கியுள்ளார். எதிர்பாராத இந்த தாக்குதலில் இருந்து அவரது உயிரை அவர் அணிந்திருந்த தலைப்பாகை காப்பற்றியது. எனினும், இந்த தாக்குதலில் அவருக்கு காயங்களும் வீக்கமும் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து அந்த சீக்கியர் கூறுகையில், 19 பவுண்ட் (8 கிலோவுக்கு மேல்) எடை கொண்ட பாட்டிலால் தாக்கப்பட்ட நிலையிலும், தன்னுடைய தலையை தலைப்பாகை காப்பாற்றி உள்ளதாக தெரிவித்தார்.
சீக்கியர் மீது தாக்குதலில் ஈடுபட்ட ரோனால்ட் ரிச்சர்டுசனுக்கு, 16 வார காலம் சிறை தண்டனையோடு, அவருக்கு 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Average Rating