விமானத்திலிருந்து இறங்கிய பயணிக்கு அதிர்ச்சி கொடுத்த அதிகாரிகள்…!!

Read Time:3 Minute, 7 Second

canada_flight_002கனடா நாட்டில் விமான பயணத்தை முடித்துக்கொண்டு இறங்கிய பெண் ஒருவர் தனது உடமைகளை சரிபார்த்தபோது பயண பெட்டிக்குள் இருந்த பொருட்களை கண்டு அதிர்ச்சி அடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
எட்மோண்டன் நகரை சேர்ந்த Nicole Ashley Squires என்ற பெண் புகைப்படைக்காரர் ஒருவர் வார விடுமுறையை கொண்டாடுவதற்கு திட்டமிட்டுள்ளார்.

இரண்டு நாட்கள் பயணம் என்பதால், மிக குறைந்த அளவிலான ஆடைகளை மட்டும் எடுத்து பெட்டிக்குள் வைத்துக்கொண்டு WestJet என்ற விமானத்தில் நேற்று பயணம் செய்துள்ளார்.

Kelowna, B.C என்ற நகரில் விமானம் தரையிறங்கியதும் உடமைகளை பரிசோதனை செய்யும் இடத்தில் தனது பெட்டியை அனுப்பிவிட்டு காத்திருந்துள்ளார்.

சிறிது நேரத்தில், பரிசோதனை பின்னர் வந்த தனது பெட்டியை தூக்கியபோது அது மிகவும் கனமாக இருந்ததை கண்டு அதனை திறந்து பார்த்துள்ளார்.

பெட்டிக்குள் ஆண் பயன்படுத்தக்கூடிய ஆடைகள், காலனிகள் மற்றும் 5 பியர் பாட்டில்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனே அதனை தனது கைப்பேசியில் படம் பிடித்து விமான நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து விளக்கம் கேட்டுள்ளார்.

சிறிது நேரத்திற்கு பிறகு, விமான நிறுவன அதிகாரியான ரோபர்ட் பால்மர் என்பவர் அந்த பெண்ணை தொடர்புக்கொண்டுள்ளார்.

அப்போது, பெட்டிகளை சரிபார்க்கும் பணியில் ஊழியர் ஒருவர் ஈடுப்பட்டிருந்தபோது, பெண்ணின் பெட்டி திறந்து இருந்ததாகவும், அதற்கு அருகில் சில பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு ‘பெட்டிக்குள் இருந்து பொருட்கள் கீழே விழுந்திருக்கலாம்’ என கருதி அந்த பொருட்களை பெண்ணின் பெட்டிக்குள் திணித்து அனுப்பி விட்டதாக கூறினார்.

எனினும், ஊழியரின் தவறுக்காக மன்னிப்பு கோருவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த அந்த பெண், ‘உள்நாட்டு விமானம் என்பதால் தனக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை.

ஆனால், இந்த தவறு சர்வதேச விமானத்தில் பயணம் செய்தபோது நிகழ்ந்து இருந்தால், தன்னை பொலிசார் கைது செய்திருப்பார்கள் என வருத்தம் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தை குளத்தில் மூழ்கியபோது செல்போனில் மூழ்கியிருந்த தாய்க்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை…!!
Next post 2 பெண் பொலிசாரை சுட்டுக்கொன்ற மனநோயாளி: பிரித்தானிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!