செக்ஸ் தொல்லையில் இருந்து தப்பிக்க சிறுவன் உடையில் பணிபுரியும் குஜராத் சிறுமி..!!

Read Time:2 Minute, 41 Second

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கோவா பகுதியை சேர்ந்தவர் மனோஜ். இவரது மனைவி அனிதா. இவர்களது மகள் பாயல்பரியா. 14 வயது சிறுமி. 3 வயதாக இருந்தபோது அவளது தந்தை மனோஜ் வலிப்பு நோயால் இறந்து விட்டார். இவளுடன் மேலும் 4 பேர் உடன் பிறந்தவர்கள் உள்ளனர். அவர்களில் 2 பேருக்கு திருமணமாகி விட்டது. மூத்த அண்ணன் சுனில் (30). ஒரு தொழிற்சாலையில் காவலாளியாக உள்ளார். அவர் மாதம் ரூ.8 ஆயிரம் சம்பாதிக்கிறார். ஆனால் அவர் தனது தாய் மற்றும் உடன் பிறந்தவர்களை தவிக்க விட்டு தனிக்குடித்தனம் சென்று விட்டார். எனவே சிறுமி பாயல் தனது 4 வயது முதல் ‘ஷு’ பாலிஷ் போடும் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்ற தொடங்கினாள். காமுகர்களின் ‘செக்ஸ்’ தொல்லையில் இருந்து அவளை காப்பாற்ற தாயார் அனிதா ஒரு வழி கண்டுபிடித்தார். அவளது தலைமுடியை வெட்டி விட்டார். அதனால் பார்க்க அவள் சிறுவன் போன்று காட்சி அளித்தாள். ‘ஷு’வுக்கு பாலிஷ் போட வருபவர்கள் பாயல் சிறுவன் என்றுதான் நினைப்பார்கள். அவளிடம் பேச்சு கொடுத்தால் மட்டுமே சிறுமி என தெரியும். சிறுமி பாயல் பிறந்ததில் இருந்து பள்ளிக்கூடம் பக்கமே சென்றதில்லை. தனது தாய் மற்றும் சகோதர, சகோதரிகள் பசியால் வாடக்கூடாது என்பதற்காக ‘ஷு’ பாலிஷ் போட்டு சம்பாதிக்கிறாள். அதுகுறித்து கூறும்போது, “நான் பிறக்கும்போதே எனது தந்தைக்கு வேண்டாத குழந்தையாக அதாவது 3–வது பெண்ணாக பிறந்தேன். எனது தாயார் சிறு சிறு வேலைகள் செய்து எங்களை காப்பாற்றினார். அவர் வலிப்பு நோயால் இறந்த பின் குடும்பம் வறுமையில் வாடியது. எனவே நான் என் பாதுகாப்புக்காக தலைமுடியை சிறுவன் போன்று வெட்டிக்கொண்டு ‘ஷு’ பாலிஷ் போட்டு சம்பாதித்து வருகிறேன். தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று தெரிவித்தாள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் தெண்டுல்கர் இலங்கை வருகை…!!
Next post பெண் ஒருவரை தாக்கி கட்டிவைத்து விட்டு நகைகள் கொள்ளை..!!