நிலச்சரிவு: 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி…!!
Read Time:1 Minute, 9 Second
கராச்சி நகரின் குடிசை பகுதியில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலியானதாக செய்தி வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி அருகே 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், ஒரு மலையை ஒட்டியுள்ள தங்கள் குடிசையில் தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர். 5 மணிநேர மீட்புப்பணிக்கு பிறகு, மீட்பு குழுவினர் இடிபாடுகளில் இருந்து 13 உடல்களை மீட்டுள்ளதாகவும், இதில் 7 பேர் குழந்தைகள் என்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த துயர சம்பவம் தொடர்பாக காவல்துறையும், நகர நிர்வாகமும் இணைந்து விசாரணை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating