பெண்ணின் மூக்கை அறுத்து கொலை செய்ய முயற்சித்த மர்ம மனிதன்: போலீஸ் வலைவீச்சு..!!
Read Time:1 Minute, 26 Second
வீட்டில் 2 வயது குழந்தையுடன் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் மூக்கை அறுத்து, அவரை கொலை செய்யவும் முயற்சித்த மர்மநபரால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மங்கோல்புரி பகுதியில் உள்ள அடுக்குமாடிக்குடியிறுப்பு ஒன்றில் வசிக்கும் அந்த பெண்ணின் வீட்டிற்குள், நேற்ரு முன் தினம் இரவு, புகுந்த அந்த கொடூரமான மர்ம மனிதன், அந்தப் பெண்ணின் மூக்கை அறுத்துள்ளான். வலியால் அலறிய அந்த பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்யவும் முயற்சித்துள்ளான். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வரவும் அவன் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
டிரைவரான அந்த பெண்ணின் கணவர் தகவலயறிந்து விரைந்து வந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். தற்போது அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Average Rating