மோசடி மூலம் கடற்படையில் வேலை: ராஜபக்சே மகன் கைதாகிறார்…!!
Read Time:55 Second
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இளைய மகன் யோஷித்த ராஜபக்சே. இவர் கடற்படையில் அதிகாரியாக பணிபுரிகிறார். இவர் இப்பணியில் முறைகேடு மற்றும் மோசடி செய்து சேர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் பயிற்சி முடிந்த பின்னர் அவருக்கு சிறந்த கடற்படை அதிகாரி விருதும் வழங்கப்பட்டது. இது குறித்து இலங்கை கடற்படை அதிகாரி ரியல் அட்மிரல் டபிள்யூ.பி. வெல் வந்த தலைமையிலான விசாரணை நடத்தியது. அதில் அவர் குற்றம் செய்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே அவரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Average Rating