கடிதத்தில் புகார் அனுப்பிய 8 வயது சிறுவனுக்கு பதில் அனுப்பிய பிரதமர் மோடி…!!
பெங்களூரைச் சேர்ந்த 8 வயது மாணவன் பிரதமர் அலுவலகத்திற்கு எழுதிய கடிதம் ஒன்றுக்கு பிரதமர் மோடி பதில் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அபினவ் என்ற 8 வயது சிறுவன் வடக்கு பெங்களூரில் உள்ள வித்யாரன்யபுராவில் இருக்கும் தொட்டபொம்மசந்திராவில் குடும்பத்துடன் வசித்து வருகிறான்.
அந்த சிறுவன் பிரதமர் அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்தில், கோரகுண்டேபாள்யா சந்திப்பு அருகே அவுட்டர் ரிங் சாலையில் ரயில்வே கிராசிங் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி பல நாட்களாக நடந்து வருகிறது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு எனது படிப்பும் பாதிக்கப்படுகிறது.
இந்த பணியால், எனது வீட்டில் இருந்து பள்ளி 3 கி.மீ. தூரத்திலேயே உள்ள நிலையிலும், பள்ளிக்கு செல்ல தினமும் 45 நிமிடங்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
எனவே அந்த மேம்பால பணியை விரைந்து முடிக்குமாறு ரயில்வே துறைக்கு உத்தரவிடுங்கள் என தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த கடிதத்திற்கு பிரதமர் மோடி பதில் கடிதம் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Average Rating