சென்னையில் மூன்று வெவ்வேறு இடங்களில் கொள்ளை

Read Time:2 Minute, 33 Second

08.gifசென்னையில் மூன்று வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் மொத்தம் 20 பவுன் நகை, ரூ.1லட்சம் ரொக்க பணம் ஆகியவை திருடு போய்வுள்ளது. அடையாறு முதல் அவென்யூவில் வசிப்பவர் ஷாஜிபாப்பு (வயது 33) இவர் அதே பகுதியில் நடை பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனம் ஒன்றில் 2 மர்ம ஆசாமிகள் வந்து முகவரி கேட்பது போல் நடித்துள்ளனர். இதை அறியாத ஷாஜிபாப்புவும் அவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது கண் இமைக்கும் நேரத்தில் 2 பேரில் ஒரு ஆசாமி ஷாஜிபாப்புவின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு பைக்கில் சிட்டாக பறந்தனர். இதுகுறித்து அடையாறு போலீசார் நடத்தி வருகின்றனர். அம்பத்தூர் ராம் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் எலக்ட்ரிகல் கடை நடத்தி வருகிறார். ஸ்ரீதர் தன் குடும்பத்தாருடன் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகைகள் 2 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை திருடு போய்யிருந்தது. இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் விசாராணை நடத்தி வருகின்றனர்.

கொரட்டூர் தேவி நகரை சேர்ந்தவர் அமர்நாத் (வயது 30). இவர் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் தஞ்சாவூர் சென்றிந்தார்.

வீடு திரும்பிய அமர்நாத் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் 5 பவுன் தங்க சங்கிலி ஆகியவை திருடு போய் இருந்தது. இதுகுறித்து கொரட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வங்காளதேசத்தை புயல் தாக்கியது; 1,200 பேர் பலி: மரங்கள் சாய்ந்தன; வீடுகள் தரைமட்டம்
Next post அதிகாரப்பகிர்வு இடம்பெறாமையே பல பிரச்சினைகளுக்கு காரணமாகும்-அமைச்சர் மைத்திரிபால சிறிசேன