ரயில்களில் , ரயில் நிலையங்களில் யாசகம் கேட்பதற்கு தடை…!!
Read Time:45 Second
எதிர்வரும் முதலாம் திகதி முதல் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பிச்சையெடுப்பது, பாடல் பாடி பணம் கேட்பது உட்பட அனைத்து வகையான யாசகம் கேட்கும் நடவடிக்கைகளும் தடைசெய்யப்படவுள்ளது.
ரயில்கள் , பிரதான ரயில் நிலையங்கள், உப ரயில் நிலையங்கள் உட்பட அனைத்திலும் யாசகம் கேட்பது தடை செய்யப்படுமென ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்கதெரிவிக்கின்றார்.
பயணிகளின் முறைப்பாட்டையடுத்தே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Average Rating