தூத்துக்குடியில் பள்ளி மாணவி வெட்டிக்கொலை: கைதான அண்ணன் வாக்குமூலம்..!!

Read Time:1 Minute, 56 Second

download (1)தூத்துக்குடி தாளமுத்துநகர் வண்ணார் தெருவை சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவரது மகள் சத்யா (வயது 14). இவர் தூத்துக்குடி ரெங்கநாதபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று சத்யா வீட்டிலிருந்த போது அங்கு வந்த அண்ணன் முறையான பிரதீப் (24) என்பவர் சத்யாவை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்றார். இச்சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை தேடி வந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே பதுங்கியிருந்த பிரதீப்பை தாளமுத்துநகர் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், எனது சித்தி மகள் சத்யா என்மீது பாசமாக இருந்தார். இதனை நான் தவறாக புரிந்து கொண்டு அவளை காதலிப்பதாக தெரிவித்தேன். இதுகுறித்து சத்யா எனது பாட்டியிடம் தெரிவித்தார். இதனால் பாட்டி மற்றும் உறவினர்கள் என்னை இனிமேல் சத்யா வீட்டிற்கு செல்லக்கூடாது என்று தடை விதித்தனர். இதற்கு காரணமான சத்யா மீது ஆத்திரம் அடைந்து அவரை வெட்டி கொலை செய்தேன் என வாக்குமூலத்தில் பிரதீப் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் பிரதீப்பிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியை கத்திரிகோலால் குத்தி கொன்றவருக்கு சிறை – ஒருவர் அடித்துக் கொலை..!!
Next post பட்டிருப்பு வலயக் கல்விப்பணிப்பாளரின் அடாவடியால் அதிபர் மரணம்..!!