கடன் தொல்லையால் 6 வயது மகளுடன் தம்பதி தற்கொலை…!!
அசாம் மாநிலம், போன்கைகான் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். கடன் தொல்லையால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
போன்கைகான் மாவட்டம், சல்பாகன் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் போஸ். இவர் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிலிட்ட நிலையில் இன்று பிணமாக மீட்கப்பட்டார். மேலும், அவரது மனைவி ரும்பா மற்றும் 6 வயது மகள் புஜூர் ஆகிய இருவரும் படுக்கையில் தலை தொங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.
சஞ்சய் போஸின் மனைவியின் வாயில் இருந்து ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், பிரேத பரிசோதனைக்கு பிறகே உண்மை தெரியவரும் என்றும் போலீசார் கூறினர்.
சஞ்சய் போஸின் குடும்பத்திற்கு நிறைய கடன்களும், சொத்து தகராறும் இருந்ததாக அவரது உறவினர்கள் மற்றும் அருகில் உள்ளவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating