வெம்பாக்கம் அருகே அத்தை மகளை கற்பழித்த கல்லூரி மாணவன் கைது…!!
ஆரணி தாலுகா ராட்டிணமங்கலம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் ராஜ்குமார் (22). ஆரணியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. பட்டப்படிப்பு படித்து வந்தார்.
அதேப்போல் இவரது அத்தை மகள் வெம்பாக்கம் தாலுகா திருப்பணமூர் ரோட்டுத் தெருவை சேர்ந்த தனம் (18). (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவர் காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். ராஜ்குமாருக்கும், தனத்துக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் உறவினர்கள் என்றாலும் நண்பர்களை போல பழகியுள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனம் விடுமுறையில் தனது வீட்டிற்கு வந்திருந்தார். இதையறிந்த ராஜ்குமார் அவரை பார்க்க சென்றார். அப்போது தனம் வீட்டில் தனியாக இருந்தார்.
இதனால் அவரை அடைய ராஜ்குமார் திட்டம் தீட்டினார். அதன்படி, கதவை உள்பக்கமாக பூட்டிய ராஜ்குமார், தனத்தை வலுகட்டாயமாக கற்பழித்தார். பின்னர் நடந்ததை யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டிவிட்டு அங்கிருந்து ராஜ்குமார் தப்பிச் சென்றார்.
இதுகுறித்து தனம் வீடு திரும்பிய பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். பெற்றோர் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். சப்–இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating