நாமக்கல் அருகே கணவன் மனைவியை கொன்று நகைகள் கொள்ளை…!!

Read Time:4 Minute, 35 Second

06a6afad-618e-4d02-ad59-e891e98baaa5_S_secvpfநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த பெரிய மணலி அருகே எலச்சி பாளையம் என்ற பகுதி உள்ளது. இங்கு உள்ள கோக்கலை எலையம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 60) விவசாயி. இவரது மனைவி ராமாயி (56). இவர்களது மகன் சரவணன்(42) திருச்செங்கோட்டில் ரிக் அதிபராக உள்ளார்.

ரங்கசாமியும், அவரது மனைவியும் தோட்டத்து வீட்டில் வசித்தனர். இங்கு மாடுகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக ரங்கசாமியின் மகன் வீட்டில் ரிக் வண்டி டிரைவராக இருப்பவர் எலையம் பாளையம் வந்து ரங்கசாமி வீட்டில் பால் வாங்கி விட்டு திருச்செங்கோடு செல்வது வழக்கம்.

இன்று காலை அவர் பால் வாங்க சென்ற போது ரங்கசாமி வீட்டு வாசலில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். ராமாயி வீட்டு கட்டிலில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

அவரது கழுத்தில் இருந்த தாலிக்கொடியும், காதில் இருந்த கம்மலையும் காணவில்லை. கழுத்தும், காதும் அறுக்கப்பட்டு இருந்தது. உடலின் பல பாகங்களில் வெட்டுக் காயமும் இருந்தது. அதே போல ரங்கசாமியின் கழுத்திலும் உடல் பாகங்களிலும் வெட்டுக்காயங்கள் இருந்தது. வீட்டு பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 15 பவுன் நகைகள் மற்றும் பணம் கொள்ளை போய் இருந்தது.

நேற்று இரவு வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் ராமாயியை சித்ரவதை செய்து கொன்று உள்ளனர். அவர் நகைகளை தர மறுத்ததால் சரமாரியாக வெட்டி கொன்று உள்ளனர். ரங்கசாமியை வீட்டில் இருந்து இழுத்து சென்று கொன்று விட்டு வாசலில் வீசி விட்டு சென்று உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், கூடுதல் சூப்பிரண்டு சந்திரமோகன், திருச்செங்கோடு டி.எஸ்.பி (பொறுப்பு) கஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து உள்ளனர். கொலை செய்யப்பட்ட ரங்கசாமி–ராமாயி ஆகியோரின் மகன் சரவணன் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்தனர். அவர்களிடம் எஸ்பி.செந்தில்குமார் விசாரணை நடத்தினார்.

இந்த இரட்டைக் கொலை சம்பவம் நகை–பணத்துக்காக மட்டும் நடந்ததா? அல்லது வேறு காரணம் உண்டா என்று எலச்சிபாளையம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். திருச்செங்கோடு பகுதியில் இதற்கு முன்பு இரண்டு இரட்டைக் கொலைகள் நடந்து உள்ளன.

தோட்டத்து வீடுகளில் தனியாக இருக்கும் தம்பதிகளை குறி வைத்து கொள்ளை கும்பல் கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்து வருகிறது. கடந்த ஆண்டு நாமக்கல் பகுதியில் இரட்டைக்கொலை நடந்த போது கரூரை சேர்ந்த கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

ஆனால் திருச்செங்கோடு பகுதியில் ஏற்கனவே நடந்த இரண்டு இரட்டைக்கொலைகளிலும் குற்றவாளிகள் பிடிபடவில்லை. தற்போது 3–வது முறையாக இரட்டைக்கொலை நடந்து உள்ளது பொது மக்களை அச்சப்பட செய்து உள்ளது.

தம்பதிகளை ஈவு இரக்க மின்றி கொடூரமாக கொலை செய்யும் கொள்ளைக் கும்பலை சுட்டு பிடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெம்பாக்கம் அருகே அத்தை மகளை கற்பழித்த கல்லூரி மாணவன் கைது…!!
Next post மும்பையில் சிலிண்டர் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி…!!