மும்பையில் சிலிண்டர் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி…!!
Read Time:1 Minute, 6 Second
மும்பை, மேற்கு குர்லா பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
சிலிண்டர் வெடித்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தினர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் ஓட்டல் ஊழியர்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும், விபத்து குறித்து குர்லா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating